2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பாவனைக்குதவாத உணவுகள் அழிப்பு

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகரசபைப் பிரிவில் இன்று வெள்ளிக்கிழமை காலை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனையின்போது, பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் மீட்கப்பட்டு அழிக்கப்பட்டதாக  பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

புதிய காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள சாப்பாட்டுக்கடைகள், உணவகங்கள், ஹோட்டல்கள், கோழி இறைச்சி விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பாவனைக்கு உதவாத இறைச்சி,  சமைக்கப்பட்ட கறிகள், ரொட்டிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X