Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 21, சனிக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்,ரீ.எல்.ஜவ்பர்கான், ஏ.எச்.ஏ. ஹுஸைன், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி வீடொன்றில், நேற்று (22) நண்பகல் வேளையில் நகைகள், பணம் திருடப்பட்டுள்ளதென காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம், புதிய காத்தான்குடி, அன்வர் பாடசாலை வீதியிலேயே இடம்பெற்றுள்ளது. வீட்டுக்காரர்கள், திருமண விருந்துக்காக மதியம் சென்றதன் பின்னரே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீடு திரும்பிய போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு காணப்பட்டதுடன் அங்கிருந்த 10 பவுன் நகையும் 1,50000 ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளதாக வீட்டுரிமையாளர், காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Jun 2025
20 Jun 2025
20 Jun 2025