Editorial / 2019 ஒக்டோபர் 30 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்
கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கான விழிப்பூட்டல் செயலமர்வு, பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில், நேற்று (29) நடைபெற்றது.
முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்செயலமர்வில், பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள், பள்ளிவாசல்களைப் பதிவு செய்யும் முறைகள், நிர்வாகத்தினர் கையாளவேண்டிய விதிமுறைகள் போன்றவை தெரிவிக்கப்பட்டன.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.ரமீஸா தலைமையில் செயலமர்வு நடைபெற்றதுடன், வளவாளர்களாக முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்திய பொறுப்பதிகாரி ஏ.எல்.ஜுனைத் நளீமி, அவிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சியாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
36 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
3 hours ago