Mayu / 2024 மே 19 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கரைப்பற்றில் உள்ள 241ஆம் படைப்பிரிவின் தலைமை அலுவலகத்தின் சிற்றுண்டிச்சாலையின் முன்னாள் இருக்கும் வேம்பு மரத்திலிருந்து கடந்த ஒரு வாரகாலமாக பால்போன்ற திரவம் வழிந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

ஆரம்பத்தில் சாதாரணமாக வெளியேற தொடங்கிய பால்போன்ற பதார்த்தம் தொடர்ந்தும் வழிந்து வருவதுடன் போத்தல்களில் சேமிக்கும் அளவிற்கும் வெளியேறி வருவதை காண முடிகின்றது.

சில காலங்களில் சில வேம்பு மரங்களிலிருந்து இது போன்ற பால் வெளியேறும் சம்பவங்கள் நடைபெற்றாலும் கூட கண்ணகி அம்மனின் ஆலயங்கள் திறக்கப்பட்டு திருக்குளிர்த்தி உற்வசங்கள் நடைபெற்றுவரும் இக்காலத்தில் இவ்வாறு பால்போன்ற திரவம் வழிந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் தற்போது இதனை பலரும் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
குறித்த வேப்ப மரத்திலிருந்து வெளியேறும் பால்போன்ற திரவம் இனிப்பாக உள்ளமையும் அப்பிரதேசத்தில் ஒரு வகை வாசம் வீசி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
வி.சுகிர்தகுமார்
52 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
4 hours ago