Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 டிசெம்பர் 18 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி பிரதேசத்திலுள்ள சகல பிரத்தியேக வகுப்புகளையும், எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 01ஆம் திகதி வரை இடை நிறுத்துமாறு, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“2017ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் தற்போது முற்றுப் பெற்றுள்ளன. மாணவர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் 3ஆம் தவனைப் பரீட்சையை முடித்து சித்தியடைந்துள்ள நிலையில், அவர்களுக்காக போதிய ஒய்வு வழங்கவேண்டியது நமது கட்டாயக் கடமையாகும்.
“டிசெம்பர் மாத பாடசாலை விடுமுறையிலும் அவர்கள் அதிகமாக பிரத்தியேக வகுப்புகளுக்குச் செல்வதால் மன உளைச்சல்களுக்கு ஆளாவதாக கல்வியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
“இதற்கமைவாக, டிசெம்பர் மாதம் 23ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 01ஆம் திகதி வரை தரம் 01 தொடக்கம் உயர்தரம் வரையுள்ள மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகள் அனைத்தையும் முற்றாக இடை நிறுத்தி மாணவர்களின் விடுமுறையை சந்தோசமாகக் கழிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு, சகல பிரத்தியேக வகுப்புகளின் உரிமையாளர்களையும் ஆசிரியர்களையும் அன்பாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
அத்தோடு, பெற்றோர்களும் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம்” என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago