ரீ.எல்.ஜவ்பர்கான் / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட எழுவருக்கு எதிராக, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பான விசாரணையை, எதிர்வரும் 19ஆம் திகதிக்கு மேல்நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.இஸ்ஸதீன் ஒத்திவைத்தார்.
2005ஆம் ஆண்டு நத்தார் ஆராதனையின்போது, மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்புடைய சந்தேகத்தில், சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட ஐவர் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று (03) மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டபோதே, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago