Princiya Dixci / 2020 டிசெம்பர் 08 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, க.விஜயரெத்தினம்
மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கவாசகர் தயாபரன், மட்டக்களப்பு மாநகர சபையில் நேற்று (07) காலை தனது கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
மாநகர சபையின் ஆணையாளராக க.சித்திரவேல் கடமையாற்றியிருந்த நிலையில், கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்துக்கு அவர் இடமாற்றப்பட்ட நிலையில், புதிய ஆணையாளராக நிர்வாக சேவையின் முதல் தரத்தைச் சேர்ந்த மாணிக்கவாசகம் தயாபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தி.சரவணபவன், பிரதி மேயர் சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago