வா.கிருஸ்ணா / 2019 ஏப்ரல் 03 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாநகரசபையை பெண்கள் சிநேக நகராக மாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், சிறுவர்கள் சிநேக நகராகவும் மாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவென, மேயர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
இலங்கையில் எந்த மாநகரசபையிலும் இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில், இவ்வாண்டு மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில், வட்டாரங்கள் தோறும் மக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்கீழ், மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட ஐந்தாம் வட்டார பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில், மக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் வகையிலான கலந்துரையால், வட்டார உறுப்பினர் வி.பூபாலராஜா தலைமையில், இன்று (03) காலை நடைபெற்றது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய மாநகர மேயர், மட்டக்களப்பு நகருக்குள் வரும் பெண்கள் பாதுகாப்பை உணரும் வகையிலான நடவடிக்கைகளை, மாநகரசபை மேற்கொண்டுவருகின்றதெனவும் அதன் முதல்கட்டமாக, மட்டக்களப்பு நகருக்குள் சி.சி.டி.வி கமெராகள் பொருத்தப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago