2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிள் மோதி வயோதிப பெண் பலி

Niroshini   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள உமா மில் வீதி கொம்மாதுறை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை(13) இரவு இலக்கத் தகடில்லாத மோட்டார் சைக்கிளுடன் வாழைச்சேனை கண்ணகிபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம்பிள்ளை தில்லையம்மா (வயது 65) என்ற வயோதிபப் பெண் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வயோதிபப் பெண் உள்வீதியிலுள்ள கடைக்கு சென்று வீடு திரும்பிய வேளையில்,வேகமாக மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த நபர் மூதாட்டி மீது மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

இதில்,படுகாயமடைந்த வயோதிபப் பெண்னை செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட போது வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்துடன் தொடர்புடைய நபர் மோட்டார் சைக்கிளைக் கைவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
பொலிஸார் மோட்டார் சைக்கிளைக் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை,கிரான் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட சந்தேக நபர் சமீபத்தில்தான் கட்டார் நாட்டிலிருந்து வந்து புதிய மோட்டார் சைக்கிளை கொள்வனவு செய்தவர் என்றும் சம்பவம் இடம்பெற்றபோது மது போதையிலிருந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X