Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு தொப்பிகல அரச வனப்பகுதியில் வேட்டையாடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மான் மற்றும் மரை இறைச்சியுடன் நேற்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்ட நபரை ஒரு இலட்சம் ரூபாய் பிணையில் செல்ல ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதவான் பேரின்பம் பிறேம்நாத் அனுமதி வழங்கியுள்ளார்.
இரண்டு உரப்பைகளில் பொதியிடப்பட்டு மோட்டார் சைக்கிளில் கொண்டுவரப்பட்ட சுமார் 50 கிலோ மான் மற்றும் மரை இறைச்சி வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள கிரான் அலுவலக அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டதுடன், மேற்படி நபரும் கைதுசெய்யப்பட்டார்.

1 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
21 Dec 2025