Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு சுகாதார அலுவலகப் பிரிவுக்குட்;பட்ட பகுதிகளில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 22 பேருக்கு டெங்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர் திருமதி பாமினி அச்சுதன் தெரிவித்தார்.
நாவற்குடா, புதூர், திருச்செந்தூர், லேடி மெனிங் றைவ் வீதி ஆகிய பகுதிகளிலேயே டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டெங்கு தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையும் வீடுகளில் சோதனை நடவடிக்கையும் நாவற்குடா, கல்லடி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டன. இதன்போதே அவர் இதனை கூறினார்.
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸார், இலங்கை விமானப்படையினர் ஆகியோரின் உதவியுடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
2 hours ago
3 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago
6 hours ago