Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
கல்குடாவில் அமைக்கப்பட்டு வரும் மதுபானத் தயாரிப்புக்கான எதனோல் மூலப்பொருள் உற்பத்தி நிலையத்துக்கான நிர்மாண வேலையை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரி மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
'கல்குடாவில் கலாசார, குடும்ப, சீரழிவுகளைத் தோற்றுவிக்க முனையும் மதுபான உற்பத்தித் தொழிற்சாலையின் நிர்மாணப் பணியை உடனே நிறுத்து', 'மதுவற்ற மாவட்டமாக மட்டக்களப்பு மலர மக்களே ஒன்றுபடுவோம்' என்று எழுதப்பட்டு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பால் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .