Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
எம்.எம்.அஹமட் அனாம் / 2017 செப்டெம்பர் 06 , பி.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசியல் மிகவும் கேவலம் கெட்டுள்ளதாக, கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி குற்றஞ்சாட்டினார்.
அரசியல் தலைவர்களுக்கிடையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமெனத் தெரியாமல் இருக்கின்ற கிழக்கு முதலமைச்சரைப் போன்றவர்களுக்கு, ஹிஸ்புல்லாஹ் போன்ற சிரேஷ்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளைப் பார்த்து, அரசியல் நாகரிகத்தைக் கற்றுக்கொள்ள வேண்டுமென எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புணாணை மேற்கு கிடச்சிமடு விசரோடை பாலத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, விவசாய அமைப்பின் தலைவர் எம்.வி.அஹமட் லெப்பை தலைமையில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
அதில் கொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கல்குடா பிரதேசம், விவசாய சமூகம் மற்றும் மீன்பிடி சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமுகமாகும். இவ்விரு சமூகமும் சிறப்பாக இருந்தால் மாத்திரம் தான், பிள்ளைகளின் கல்வி, பிரதேச அபிவிருத்தி என்ற கனவை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
“பொத்தானை பிரதேசத்தில் 127 குடும்பங்கள் காலாகாலமாக வாழ்ந்து வந்தன. இவர்களுக்கு வாக்காளர் பட்டியல், பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டைகள் அங்கு இருந்தமைக்காக ஆதாரமாக இருந்த போதும், அரச அதிகாரிகள் மீள்குடியேற அனுமதிக்கின்றார்கள் இல்லை.
“மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எவ்வளவு நெருக்குதலோடு உங்களுக்குச் சேவை செய்து வருகின்றோம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
“புணாணையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகத்தை, பொதுபலசேனா அணியினர் வந்து, இது கிழக்காசியாவிலே கட்டப்படும் பெரிய பள்ளிவாயல் என்று சொல்லும் அளவுக்கு இன்று மக்களுடைய மனநிலை மாறியிருக்கின்றது.
“ஒருவன் விழுகின்ற போது அவனைத் தூக்கி விடும் அரசியல்வாதியாக நாங்கள் செயற்படுகின்றோம். இன்னொருவன் செய்த வேலைத்திட்டத்தில் தங்களுடைய பெயரை போட்டுக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் ஆசைப்பட்டது கிடையாது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
31 minute ago
9 hours ago