2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

மட்டு.மாவட்ட செயலகத்தில் கொரோனா தொற்றுநீக்கி தெளிக்கும் வேலைத்திட்டம்

Editorial   / 2020 ஏப்ரல் 03 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான் 

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களையும் அரச ஊழியர்களையும் பாதுகாக்கும் நோக்கில் முழுநாளும் மக்கள் அதிகளவில் வருகை தரும்  மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில், கொரோனா தொற்றுநீக்கி நடவடிக்கைககள், இன்று(3) மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது, கிருமிகளை அழிக்கும் திரவம் தெளிக்கப்பட்டது.

இதேவேளை காத்தான்குடி சுகாதார வைத்தியதிகாரி பணிமனை, நகரசபை, பொலிஸாhர் ஆகியோர் இணைந்து காத்தான்குடி நகரில், கிருமி நீக்கி தெளிக்கும் நடவடிக்கைககளை மேற்கொண்டனர்.

நகர்  முழுவதிலும்  கொரோனா தொற்று நீக்கிகள் தெளிக்கப்பட்டன.

காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர்  தலைமையில் நடைபெற்ற தொற்றுநீக்கி தெளிக்கும் வைபவத்தில், காத்தான்குடி  சுகாதார வைத்தியதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .