2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்: மௌலவிக்கு தொடர் விளக்கமறியல்

Editorial   / 2024 மார்ச் 21 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு  கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு  கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன்  முன்னிலையில் புதன்கிழமை(20)     விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் மௌலவி உட்பட  சிசிடிவி காணொளிகளை அழித்த குற்றச்சாட்டில்   கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகிய  4 சந்தேக நபர்களும்  மன்றில்  முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன் போது  கடந்த தவணைகளில்  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் கைதான   4 சந்தேக நபர்களை கடும் நிபந்தனையின் கீழ் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில்  புதன்கிழமை(20)     மன்றில் ஆஜராகி இருந்தனர்.பின்னர் இரு தரப்பினரின் வாதப்பிரதிவாதங்களின் பின்னர்  சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

குறித்த சம்பவத்தில் கடந்த தவணையின் போது 30,26, 22, 23, வயது மதிக்கத்தக்க  4 சந்தேக நபர்களை   பிணையில் விடுவித்தல் தொடர்பாக சமர்ப்பணம் மற்றும்   குறித்த வழக்கில்   பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி  உட்பட  ஏனைய தரப்பினரின்   விடயங்களை ஆராய்ந்த நீதிவான்    நீண்ட சமர்ப்பணத்தின் பின்னர்  மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில்  கைதான   4 சந்தேக நபர்களை தலா 10 இலட்சம் ரூபாய் சரீர பிணை ,மாதம் இறுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமை  சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடுதல், வெளிநாட்டு பயணத்தடை, கடவுச்சீட்டு நீதிமன்றில் பாரப்படுத்தல்,  குறித்த வழக்கு தவணைகளில் தவறாது ஆஜராகுதல், உள்ளிட்ட பிணை நிபந்தனை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் மற்றுமொரு சந்தேக நபரான மௌலவிக்கு விளக்கமறியல்  நீடிக்கபட்டு   எதிர்வரும்  ஏப்ரல்  மாதம் 03  திகதி வரை வழக்கினை ஒத்தி  வைக்குமாறு கல்முனை நீதிவான்  உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X