Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 04 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன்
கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட 4 மாணவர்களுக்கான ஞாபகார்த்த புலமைப்பரிசில் பணம் வழங்குவதற்கான வைப்புச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை புதிய கல்முனை வீதியில் அமைந்துள்ள வைத்திய பீடத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு கோட்டைமுனையைச் சேர்ந்த நாகமணி புரணம்மா ஆச்சாரி மற்றும் சண்முகம் பாக்கியலட்சுமி ஆச்சாரி ஞாபகார்த்தமாக ரூபாய் 2 மில்லியனை மட்டக்களப்பு மக்கள் வங்கியில் வைப்பீடு செய்து அதற்கான சான்றிதழை குறித்த குடும்பத்தைச் சேர்ந்த எஸ். சந்திரா, கிழக்கு பல்கலைக்கழக சுகாதார பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரும் பீடாதிபதியுமான கே.ரி.சுந்தரேசனிடம் கையளித்தார்.
வைத்தியபீடத்தின் கபினட்சபையின் ஆலோசனைக்கிணங்க 5 ஆண்டுகள் கொண்ட கல்வியாண்டில் முதல் 2 வருடத்துக்கு 2 பேருக்கும் அடுத்த 2 வருடத்தில் ஒருவருக்கும் இறுதியாண்டில் ஒருவருக்குமாக 4 பேருக்கு தலா ரூபாய் 2,500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக பீடாதிபதி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
16 minute ago
34 minute ago
1 hours ago