2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மலேசிய - மட்டக்களப்பு ரோட்டரிக் கழகங்கள் கைச்சாத்து

Freelancer   / 2023 ஜனவரி 26 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி சகாதேவராஜா

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி, சுகாதார சமூகநல அபிவிருத்தித் திட்டங்களுக்கான பல கோடி ரூபாய் பெறுமதியான உடன்படிக்கை மலேசிய - மட்டக்களப்பு றோட்டரி கழகங்களுக்கு இடையே, நேற்று முன்தினம் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையில் மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத் தலைவர் ரோட்டரியன்  பு. ரமணன், கோலாலம்பூர் மத்தி ரோட்டரிக் கழக தலைவி றோட்டரியன் அஞ்சலினா ஆரோக்கியசாமி ஆகியோர் கைச்சாத்திட்டனர்.  மேலும், மலேசிய மாவட்ட ரோட்டரி ஆளுநர் ராஜசேகரன் பிண்டி, கனகேஸ்வரி சுப்பையா ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .