2025 மே 09, வெள்ளிக்கிழமை

மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் நியமனம்

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், கனகராசா சரவணன், க.விஜயரெத்தினம்

கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த சரவணமுத்து நவநீதன், திருகோணமலையிலுள்ள  கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அலுவலகத்தில், நேற்று (03) கடமைகளைப் பொறுப்பேற்றார்.

1995ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்குத் தெரிவான நவநீதன், 19996ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரையில் மட்டக்களப்பு மாநகர சபையின்ஆணையாளராகக் கடமையாற்றினார்.

நாட்டுச் சூழல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி, கனடாவில் தங்கியிருந்த இவர், 2018ஆம் ஆண்டு முதல் சேவையில் இணைந்து கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் உதவிச் செயலாளராகக் கடமையாற்றினார்.

இந்நிலையில், தற்போது கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக, கிழக்கு மாகாண ஆளுநர் சான் விஜயலால் டி சில்வாவால் நியமிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X