எம்.எம்.அஹமட் அனாம் / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், வரவு -செலவுத்திட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட மாதாந்தக் கொடுப்பனவை அதிகரிக்கும் வகையில், சமூக சேவைகள் அமைச்சால் மாதாந்தக் கொடுப்பனவுகள் நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக சேவைத் திணைக்களத்தால் நிதி உதவிகள் வழங்கும் நிகழ்வு, செயலகக் கேட்போர் கூடத்தில், நேற்று (21) நடைபெற்றது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர், செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஜெயசேகர், சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி யாழினி தயாபரன், அபிவிருத்தி உத்தியோகத்தர் வ.பாத்திமா நுஸ்ஹா, ஓட்டமாவடி சிகரம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் தலைவர் எஸ்.தௌபீக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, 127 பேர் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், பழைய நபர்களான 68 மாற்றுத்திறனாளிகள் என, 195 பேருக்கு 5,000 ரூபாய் வீதம் மூன்று மாதங்களுக்கான 15,000 ரூபாய் வழங்கப்பட்டது.
17 minute ago
45 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
45 minute ago
3 hours ago