2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

மாவீரர் துயிலும் இல்ல நினைவு தூபி இடித்தழிப்பு

Editorial   / 2023 நவம்பர் 23 , பி.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு தரவை மாவீரர் இல்லத்தில் அமைக்கப்பட்டு வந்த நினைவு தூபியை பொலிஸார் இன்று வியாழக்கிழமை (23) இடித்து தள்ளியுள்ளனர்.

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுவருவதாக நீதிமன்ற உத்தரவுடன் சென்று அந்த நினைவு தூபியை பொலிஸார் இடித்து தள்ளியுள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள தரவை  மாவீரர்  துயிலும் இல்லத்தில் நினைவு தூபி ஒன்றை  மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கல்லால் அமைத்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த நினைவு தூபி அனுமதி எதுவும் பெறாமல் சட்டவிரோதமாக கட்டப்பட்டுவருவதாக இதனை உடன் அகற்றுமாறு  உத்தரவிடக்கோரிகோரி பொலிஸார் வாழைச்சேனை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் அதனை அகற்ற உடனே அகற்றுமாறு உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவுடன்  தரவை மாவீரர் இல்லத்துக்குள் நுழைந்த பொலிஸார் அந்த நினைவு தூபியை இடடித்து தள்ளி சென்றுள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X