2025 மே 07, புதன்கிழமை

ரயிலில் மோதி வயோதிபர் பலி

Thipaan   / 2015 ஒக்டோபர் 31 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கொழும்பு- மட்டக்களப்பு கடுகதி ரயிலில், இன்று(31) அதிகாலை 5.30 மணியளவில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் பலயாகியுள்ளார் என மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பலியானவர் கருவப்பங்கேணியைச் சேர்ந்த 79 வயதுடைய மூத்ததம்பி வடிவேல் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு ரயில் நிலையத்திலிருந்து சற்றுத் தொலைவிலுள்ள கருவப்பங்கேணியால் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த இரவு கடுகதி ரயிலில் குறித்த நபர் மோதுண்டு பலயாகியுள்ளார்.

இது தொடர்பான மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X