2025 மே 23, வெள்ளிக்கிழமை

ரெயினுடன் மோதி ‘படி’ வாகனம் விபத்து

பேரின்பராஜா சபேஷ்   / 2017 செப்டெம்பர் 11 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


மட்டு, முறக்கொட்டாஞ்சேனை, தேவாபுரம் புகையிரக் கடவையில் சனிக்கிழமை (09) ரெயினுடன் ‘படி’ ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   

இச்சம்பவத்தில் பேக்கரி பொருட்களை விற்பனை செய்யும் வாகனம், ரெயில்வே  கடவையைக் கடக்க முற்பட்ட வேளை, பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த எரிபொருள் ஏற்றிவந்த ரெயின் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் வாகனத்தைச் செலுத்திவந்த பேக்கரி உரிமையாளரான தம்பிராசா சிவநேசன் (வயது 60) என்பவரும் சித்தாண்டியைச் சேர்ந்த எஸ்.  நிரோஷன் (வயது 18)‪ என்பவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக, ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X