2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வாகன விபத்தில் வயோதிபர் மரணம்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி இரண்டாம் குறிச்சி பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
காத்தான்குடி பிரதான வீதியை துவிச்சக்கரவண்டியில் கடக்க முயற்சித்தவர் மீது டிப்பர் வாகனமொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
 
இதன்போது துவிச்சக்கர வண்டியில் சென்ற காத்தான்குடி இரண்டாம் குறிச்சியைச் சேர்ந்த மௌலவி எம்.எப். ஆதம்லெவ்வை (78) என்பவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போது அங்கு உயிரிழந்துள்ளார்.
 
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X