2025 மே 26, திங்கட்கிழமை

விபத்தில் இளைஞர்கள் படுகாயம்

Niroshini   / 2017 மே 13 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

கல்லடி  பாலத்தில் இடம்பெற்ற விபத்தில், போதையில் வந்ததாக தெரிவிக்கப்படும் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (12) 10.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடியில் இருந்து கல்லடி நோக்கிச் சென்ற இரண்டு மோட்டார் சைக்கில்கள் மட்டக்களப்பிலிருந்து காத்தான்குடி நோக்கி வந்த காருடன் நேருக்கு நேர் மோதியதில் இரு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்த மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த இளைஞர்கள் கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X