2025 மே 07, புதன்கிழமை

விபத்தில் நால்வர் காயம்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 25 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்,வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, மகிழடித்தீவு பிரதான வீதியில்  செவ்வாய்க்கிழமை இரவு (24) முச்சக்கரவண்டியும் 02 மோட்டார் சைக்கிள்களும் மோதியதில்  காயமடைந்த 04 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

மோட்டார் சைக்கிளொன்று கனரக வாகனத்தை முந்திச்  செல்வதற்கு முற்பட்டபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி பின்னால் வந்த முச்சக்கரவண்டியும் மோதியதினால் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில்  இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X