2025 மே 03, சனிக்கிழமை

வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஓட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம்

Editorial   / 2020 ஏப்ரல் 23 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வ.சக்தி

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் முகமாக கடந்த ஒரு மாத காலமாக ஊரடங்குச் சட்டத்தின் கீழ் மக்கள் வாழ்ந்து வந்தனர். இதன் காரணமாக, கூலித் தொழிலாளர்கள் தொடக்கம், ஏனைய சுய தொழில் செய்பவர்களும் எதுவித வருமானமுமின்றி, தமது வாழ்வாதாரத்தை இழந்திருந்தனர்.

இவ்வாறானவர்களுக்கு, பல பொது அமைப்புகளும், தனி நபர்களும், தனவந்தர்களும், மக்கள் பிரதிநிதிகளும், தங்களாலான நிவாரணப் பொதிகளை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்துக்குட்பட்ட களுவாஞ்சிகுடி, எருவில் பகுதியிலுள்ள ஓட்டோ ஓட்டுநர்களும் தமது வாழ்வாதாரத்தை இழந்திருந்தனர். அவர்களுக்குரிய உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு,  களுவாஞ்சிகுடி பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (22) நடைபெற்றது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினரும், சமூக சேவையாளருமான மேகசுந்தரம் வினோராஜ், தமது சொந்த நிதியிலிருந்து 80 ஓட்டோ ஓட்டுநர்களுக்கு இதன்போது உலர் உணவுப் பொதிகளை வழங்கினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X