2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

விசேட அதிரடிப்படையினரால் வவுணதீவில் ஐவர் கைது

Editorial   / 2020 ஜூலை 12 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு, வந்தாறுமூலை, சிவப்புபாலத்தடி பிரதேசத்தில் சட்டவிரோமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 05 பேர், வவுணதீவு விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மணல் ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட 05 உழவு இயந்திரங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக, அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள், ஏறாவூர்ப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், உழவு இயந்திரங்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.

மேற்படி பிரதேசத்தில் மணல் அகழ்வதற்கான அனுமதிப் பத்திரங்கள் இவர்களிடம் இருக்கவில்லையெனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .