Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஜூலை 08 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், க. விஜயரெத்தினம், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலை, வந்தாறுமூலையில் இன்று (08) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில், சிறுவனொருவன் உயிரிழந்ததுடன், அறுவர் படுகாயங்களுக்குள்ளாகினர் என, ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து ஏறாவூர் நோக்கிப் பயணித்த வான், அதிகாலை 3.30 மணியளவில் கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள மின்கம்பத்துடன் மோதியே விபத்துச் சம்பவித்துள்ளது.
இவ்விபத்தில், ஏறாவூர், விதானையார் வீதியை அண்டி வசிக்கும் றமீஸ் சாபித் (வயது 9) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார். சடலம், பிரேத பரிசோதனைக்காக, ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த அறுவரும் மேலதிக சிகிச்சைக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், ஒருவரின் நிலை கவலைக்கிடமாகக் காணப்படுகிறது எனவும், வைத்தியசாலைத் தகவல் தெரிவிக்கிறது.
இவ்விபத்தால், மின்கம்பம் சரிந்து விழுந்ததில் மட்டக்களப்பின் சில பகுதிகளில் இன்று அதிகாலை மின்சாரம் தடைப்பட்டிருந்ததுடன், விபத்து தொடர்பில் பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
11 minute ago
23 minute ago