Princiya Dixci / 2022 மே 03 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன்
சுவாமி விபுலானந்தரின் 130ஆவது பிறந்ததின நிகழ்வு, கல்லடி, உப்போடையில் அமைந்துள்ள சுவாமி விபுலாநந்தர் மணி மண்டபத்தில் உள்ள அவரது சமாதியில் இன்று (03) இடம்பெற்றது.
சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு சபையின் தலைவர் க.பாஸ்கரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது, இராமகிருஷ்ண மிஷன் சுவாமி, அடிகளாரின் சமாதிக்கு பூசை செய்து, மலரஞ்சலி செலுத்தி, வணங்கி விபுலானந்தரின் பணிகள் தொடர்பிலும் கருத்துரை நிகழ்த்தினார்.
சுவாமிகளால் பாடப்பட்ட பாடலும் பாடப்பட்டது. நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் மலர் தூபி வணக்கம் செலுத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .