2026 பெப்ரவரி 05, வியாழக்கிழமை

விளக்கமறியல் கைதி வைத்தியசாலையில் மரணம்

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 31 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்த காத்தான்குடியைச் சேர்ந்த விளக்கமறியல் கைதியொருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வியாழக்கிழமை (28) காலை மரணமடைந்துள்ளார்.

புதிய காத்தான்குடி, இரண்டாம் குறிச்சியைச் சேர்ந்த 56 வயதான மேற்படி விளக்க மறியல் கைதி, சுகயீனமுற்றிருந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவரின் ஜனாசா வெள்ளிக்கிழமை (29) உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு, புதிய காத்தான்குடியிலுள்ள மைய்யவாடியில் அன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X