Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 06 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், வடிவேல் சக்திவேல்
கொழும்பு - மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் வெலிக்கந்தை பொலிஸ் பிரிவிலுள்ள மொனராத்தென்ன பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வேளையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளாரெனவும் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனரெனவும், பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கல்முனை சாலைக்குச் சொந்தமான இ.போ.ச பஸ்ஸுடன், பொலொன்னறுவையிலிருந்து வெலிக்கந்தை நோக்கி வந்து கொண்டிருந்த லொறியொன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், இவ்விபத்து நேர்ந்துள்ளதெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வெலிக்கந்தை பிரதேச வைத்தியசாலைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு, படுகாயமடைந்த மூவர் மேலதிக சிகிச்சைக்காக பொலொன்னறுவை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
ஸ்தலத்துக்கு விரைந்த வெலிக்கந்தைப் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய பஸ்ஸில் இருந்த பயணிகள் தமது பயணத்தை தங்கு தடையின்றித் தொடர்வதற்காக வேறு பஸ் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டதாகவும் பயணிகள் எவருக்கும் காயமேற்படவில்லை என்றும் கல்முனை இலங்கைப் போக்குவரத்துச் சபை சாலை முகாமையாளர் வெள்ளத்தம்பி ஜவ்பர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago