2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாட்களுக்கு பின்னர் மீட்பு

Kanagaraj   / 2013 ஜனவரி 17 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.சுவர்ணஸ்ரீ

பூண்டுலோயா சீன் கீழ்ப்பிரிவு தோட்டத்தில் கடந்த 7 ஆம் திகதி  சிற்றாறொன்றைக் கடக்க முற்பட்ட  போது ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்ணின் சடலம்  11 நாட்களுக்குப் பிறகு இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது. 

பூண்டுலோயா பிரதேசத்தில் கடந்த 7 ஆம் திகதி   பிற்பகல் வேளையில் கடும் மழை பெய்து கொண்டிருந்த போது குறிப்பிட்ட பெண் தனது கணவருடனும் பிள்ளையுடனும் வீட்டுக்கு அருகிலுள்ள சிற்றாறைக் கடக்க முற்பட்ட போது அந்தப்பெண்ணும் பிள்ளையும் ஆற்றில் தவறி விழுந்துள்ளனர். அதன் போது குறிப்பிட்ட பெண்ணின் கணவர் பிள்ளையை உடனடியாக தூக்கிய போதும் தனது மனைவியைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.

இதனைத் தொடர்ந்து தோட்ட மக்கள் குறிப்பிட்ட பெண்ணின் சடலத்தினை  ஆற்றுப்பகுதிகளிலும் கொத்மலை நீர்த்தேக்கப்பகுதியிலும் தொடர்ச்சியாக தேடி வந்த போதும் சடலத்தினை மீட்க முடியாமல் போய்விட்டது.

இந்த நிலையில் இன்று 17 ஆம் திகதி  பிற்பகல் வேளையில் பூண்டுலோயா பழைய தபாலகத்துக்கு அருகிலுள்ள ஆற்றுக்குச் சென்ற இளைஞர் ஒருவர் ஆற்றோரத்தில் கையொன்று வெளிப்பட்டு தெரிவதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதன் பின்பு பூண்டுலோயா பொலிஸார் இந்தச்சடலம் குறித்த உறுதிப்படுத்தலுக்குப் பிறகு சடலத்தினை சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X