2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

குளவி கொட்டியதில் 24 தொழிலாளர்கள் வைத்தியசாலையில்

Kanagaraj   / 2013 ஜனவரி 05 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுவர்ணஸ்ரீ)

குளவி கொட்டியதில் பெண்தொழிலாளர்கள் 24 பேர் லிந்துல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லிந்துல நானுஓயா தோட்டத்திலேயே இந்த சம்பவம் இன்று சனிக்கிமை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களில் 5 பேர் சிகிச்சை பெற்றுக்கொண்டு வீட்டுக்கு திரும்பியுள்ளதாகவும் ஏனைய 19 பேரும் தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்துக்கொடுக்குமாறு இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் பணித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X