2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

கோவில் உற்சவ உணவு விஷமானதால் 3 வயது சிறுமி பலி

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எப்.எம். தாஹீர்)

பதுளை மடுல்சீமை எலமான தோட்ட காளியம்மன் கோவில் வருடாந்த உற்சவத்தின்போது வழங்கப்பட்ட உணவு விஷமானதில் 3 வயது சிறுமி உயிரிழந்ததுடன், 10 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் பதுளை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொதுவைத்தியசாலை பணிப்பாளர் ஏ.எல்.எம்.நசீர் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் 10 வயதிற்கும் கீழ்ப்பட்டவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களாவர்.

குறித்த சம்பவத்தில் வேதநாயகம் சரஸ்வதி தம்பதியினரின் புதல்வி சஹானா (வயது 3) என்பவரே உயிரிழந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட ஏனையோர் பதுளை பொதுவைத்தியசாலையின் 23 ஆம் விடுதியில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X