Editorial / 2023 ஜூன் 12 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் செனவிரத்ன
பேராதனைப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் புதிய மாணவர் குழுவை துன்புறுத்தி, பகிடிவதைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் அப்பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் 11 பேருக்கு தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தரும் ஊடகப் பேச்சாளருமான பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார்.
முகாமைத்துவ பீடத்துக்கு புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்கள் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று அங்கு தங்கியிருந்த மாணவர்களை பகிடி வதைக்கு உட்படுத்தியதாக செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், 11 மாணவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, தற்காலிகமாக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago