2026 மே 09, சனிக்கிழமை

’20 வருட ஆட்சியில் காணாததை நான்கு வருடங்களில் கண்டோம்’

மொஹொமட் ஆஸிக்   / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த அரசாங்கங்கள், 20 வருடங்களில் செய்த அபிவிருத்தியை விட, கூடுதலான அபிவிருத்தியை, தற்போதைய அரசாங்கம் இந்த நான்கு வருடத்தில் செய்து முடித்துள்ளது என்று, நீர் வளங்கள், நகர அபிவிருத்தி மற்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் லகீ ஜயவர்தன தெரிவித்தார்.

கண்டி, கட்டுகஸ்தோட்டை நீர் விநியோக சபையின் அலுவலகத்தில்,  நேற்று (31) இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தங்களால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதி, தங்களது எதிர்பார்ப்புக்கு இணங்க, ஆட்சியை நடத்திச் சென்றார் என்றும் அவரது ஆட்சிக் காலத்தில், வெள்ளை வான் கலாசாரம் ஒழிக்கப்பட்டு, அரசாங்கத் துப்பாக்கிகளில் ஏற்பட்ட உயிரிழப்பு நிறுத்தப்பட்டது என்று கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .