2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த பெண் மரணம்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 18 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எப்.எம்.தாஹிர்)

மொனராகலையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பஸ்ஸிற்குள் பெண்னொருவர் உயிரிழந்துள்தாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த பெண் பசறை தொலபோவத்த எனும் இடத்தைச் சேர்ந்த எஸ்.டி.சாந்தினி (வயது 45) என்ற ஒரு பிள்ளையின் தாயாவார்.

அவரது கணவர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், பதுளை பொதுவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதை பார்வையிடுவதற்காக பஸ்சில் பயணித்துக் கொண்டிருந்த வேளை, பசறை பிரதேசத்தல் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

அவரின் சடலம் மரண விசாரணைகளுக்காக பசறை மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X