2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி புதிய மாணவர் அனுமதி

A.P.Mathan   / 2011 ஜனவரி 03 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

பத்தனை ஸ்ரீபாத தேசியகல்வியியற் கல்லூரியின் இவ்வருடத்திற்கான புதிய மாணவர் அனுமதி எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கல்லூரியின் பீடாதிபதி ஏ.சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார்.

இவ்வருடத்திற்காக அனுமதிக்கப்படவுள்ள மாணவர்களின் 90 பேருக்கான அழைப்புக் கடிதங்கள் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த மாணவர்களுக்காக ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ள பிணைப் பத்திரம் செல்லுபடியற்றதாக்கியுள்ளதால் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்குப் புதியதொரு பிணைப்பத்திரம் அனுப்பி வைக்கப்படுமென்றும், இந்தப் புதிய பிணைப் பத்திரத்தினை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடபதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X