2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

கந்தப்பளை, பார்க் தோட்டத்தில் இளைஞனின் சடலம் மீட்பு

Kogilavani   / 2013 ஜனவரி 08 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.சுவர்ணஸ்ரீ

கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பார்க் தோட்டத்தில் இளைஞர் ஒருவரின் சடலமொன்றினை கந்தப்பளை பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை மீட்டுள்ளனர்.

கந்தப்பளை நகரிலுள்ள வர்த்தகர் ஒருவரின் 22 வயதுடைய மகனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், பார்க் தோட்டத்தின் 10 ஆம் இலக்க மலையில் தேயிலைச் செடிகளுக்கு இடையிலிருந்து இச்சடலத்தை மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கந்தப்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X