2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

இலங்கை கல்விச்சமூக சம்மேளனத்தின் பொதுக்கூட்டம்

Kogilavani   / 2015 பெப்ரவரி 24 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதி காலை 10.00 மணிக்கு இலங்கை கல்விச்சமூக சம்மேளனத்தின் பொதுக்கூட்டம் சம்மேளனத்தின் தலைவர் லெனின் மதிவானம் தலைமையில் ஹட்டன் நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


இக்கூட்டத்தில், சம்மேளனத்தின் சிரேஷ்ட ஆலோசகரும் உதவிக் கல்விப்பணிப்பாளருமான பீ.ஈ.ஜீ.சுரேந்திரன் வரவேற்புரையையும்  பேராசிரியர் தை.தனராஜ், கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ் ஆகியோர் சிறப்பு சொற்பொழிவாளர்களாக கலந்து கொள்வார்கள்.


பொதுச்செயலாளர் ஆர்.சங்கரமணிவண்ணன் சம்மேளனத்தின் யாப்பு விதிகள் பற்றி விளக்கவுள்ளதுடன், சம்மேளனத்தின் உபக்குழுத்தலைவர்களான திருவாளர்கள் எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா, எம்.சந்திரன், எஸ்.சுரேஷ்காந்தன், எஸ்.குமார், எம்.எஸ்.இங்கர்சால் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.


நன்றி உரையை நிருவாகச்செயலாளர் கே.கிருஷ்ணன் நன்றியுரை வழங்குவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .