2026 மே 15, வெள்ளிக்கிழமை

விபத்தில் இருவர் படுகாயம்

Sudharshini   / 2015 மார்ச் 04 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் பகுதியில் இன்று (04) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டனிலிருந்து வட்டளை நோக்கி சென்றுகொண்டிருந்த டிப்பர் ரக வாகனம் ஒன்றுடன் கொழும்பு, ஹோமாகம பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்து கொண்டிருந்த  மோட்டர் வண்டி, நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பணத்த இருவருமே படுகாயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தமையாலே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .