2026 மே 15, வெள்ளிக்கிழமை

ஹரோய்ன் வைத்திருந்த நபருக்கு விளக்கமறியல்

Gavitha   / 2015 மார்ச் 16 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.தி.பெருமாள்

மஸ்கெலியா, நல்லத்தண்ணி நகரில் வைத்து 470 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில்,  மஸ்கெலியா பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை,  எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு,  ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் பிரசாந் லியனகே உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி சந்தேக நபரை கடந்த புதன்கிழமை (11), பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதென பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், குறித்த சந்தேக நபர் தொடர்பில் புலன்விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .