2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

குளவி கொட்டு: மேலும் 10 பேர் வைத்தியசாலையில்

Kogilavani   / 2015 மே 11 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிங்கிபோனி தோட்ட பகுதியில்; திங்கட்கிழமை(11) பிற்பகல் குளவி கொட்டுக்கு இலக்கான மேலும் 10 பேர் டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெண் தொழிலாளர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழுந்து பறித்து கொண்டிருந்த போது தேயிலை மலையிலிருந்து கலைந்து வந்த குளவிகள் இவ்வாறு தம்மை  தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

சிகிச்சையின் பின்னர் 6 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும் 4 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எபோட்சிலி தோட்டத்தில் இன்று திங்கட்கிழமை காலை (11) குளவி கொட்டுக்கு இலக்கான 11 பேர் கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .