2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

1693 பேருக்கு ஓய்வூதிய கொடுப்பனவு வழங்க நடவடிக்கை

Kogilavani   / 2015 மே 26 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

சப்ரகமுவ மாகாணத்தில் கூட்டுறவு சங்க சேவையாளர்கள் 1693 பேருக்கு ஓய்வூதிய கொடுப்பனவு வழங்க சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனடிப்படையில் இரத்தினபுரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்க சேவையாளர் 985 பேருக்கு ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு,  இன்று செவ்வாய்க்கிழமை (26) சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா, சப்ரகமுவ மாகாண முதலமைச்சரும் மாகாண கூட்டுறவுதுறை அமைச்சருமான மஹிபால ஹேரத், மாகாண அமைச்சர் ரஞ்ஜித் பண்டார, மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .