2025 ஜூலை 03, வியாழக்கிழமை

நடமாடும் சேவை

Sudharshini   / 2015 மே 30 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனின் பணிப்புரைக்கமைய, கினிகத்தேனை பொலிஸாரின் ஏற்பாட்டில் கினிகத்தேனை அபினவாரம விகாரையில் பொலிஸ் நடமாடும் சேவை இன்று (30) இடம்பெற்றது.

இந்த நடமாடும் சேவையில் சுகாதார முகாம், கர்ப்பிணி தாய்மார்களுக்கான செயலமர்வு மற்றும் மூக்குகண்ணாடி வழங்குதல் போன்ற சேவைகள் இடம்பெற்றன.

இதன்போது கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் பெண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் இலங்கைக்கு தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்த அம்பகமுவ பிரதேசத்தை சேர்ந்த யாமனி துலாஞ்சலிக்கு கினிகத்தேனை நகர வர்த்தகர்களின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .