2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

நம்பிக்கை இல்லா பிரேரணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவருக்குமானதாகவே கருத வேண்டியுள்ளது: இராதா

Sudharshini   / 2015 ஜூன் 06 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

டி.ஷங்கீதன்

இன்று எதிர்கட்சிகள் பிரதமர் ரணில் மீது நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரவுள்ளதாக கூறுகின்றார்கள். ஆனால், அந்த நம்பிக்கை இல்லா பிரேரணை ஜனாதிபதி மைத்திரபால சிறசேனவுக்கும் பொருந்தும் என்றே நான் கருதுகின்றேன்.

எனவே, நம்பிக்கை இல்லா பிரேரணை இருவருக்குமானதாகவே கருத வேண்டியுள்ளது. அப்படியானால் தனது கட்சி தலைவருக்கு எதிராகவும் இந்த பிரேரணை கொண்டு வரப்படுகின்றதா? என்ற சந்தேகம் எழுகின்றது என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு தாளங்குடா கல்வி இயல் கல்லூரியில் நிலவும் குறைபாடுகள் தொடர்பான கலந்துரையாடல்  இன்று (06) கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய போதே அவர் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

நடைபெற்று முடிந்த தேர்தலில் ஜனாதிபதியாக மைத்திரபால சிறிசேனவும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் தெரிவு செய்யப்படுவார்கள் என்றே கூறப்பட்டது. அதற்கு ஆதரவாக மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். எனவே, நம்பிக்கை இல்லா பிரேரணை இருவருக்குமானதாகவே கருத வேண்டியுள்ளது.

தேர்தலுக்கு முன்பே ரணில் விக்கிரமசிங்கவும் மைத்திரபால சிறிசேனவும் பல முக்கிய விடயங்களில் தீர்மானங்களை மேற்கொண்ட பின்பே தேர்தலில் போட்டியிட்டனர். அதன் பிரகாரமே இன்று அனைத்தும் இடம்பெறுகின்றது. இன்று மைத்திரபால சிறிசேன வெற்றிபெற்ற பின்பே சுதந்திர கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். எனவே, ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு விரோதமாக அவர் செயற்படமாட்டார். அதாவது அவர் யாருக்கும் நம்பிக்கை துரோகம் செய்ய முன்வரமாட்டார். அது அவருக்கு பழக்கமான விடயமும் அல்ல.

இன்று எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லா பிரேனை கொண்டுவருவதாக கூறுகின்றார்கள். இது யாருடைய செயல்பாடு என தெரியவில்லை. முன்னாள் ஜனாதிபதியின் தூண்டுதலின்பேரில் இது முன்னெடுக்கப்படுகின்றதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நமக்கு தெரியும் தமிழ் திரைப்படங்களில் வில்லன் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகர்களே கதையை இழுத்து செல்வார்கள். அதாவது, கதாநாயகியை கடத்துவது போன்ற வேலைகளில் ஈடுபடுவார்கள்.

இலங்கை அரசியலில் முன்னாள் ஜனாதிபதி அந்த பாத்திரத்தை ஏற்று நடிப்பதாகவே நான் கருதுகின்றேன்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க தயாராகவே இருக்கின்றார். ஏனென்றால் அவர் மீது இன்று இந்த நாட்டு மக்களுக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆனால் எதிர்கட்சிகள் தேர்தலை சந்திக்க முடியாமல் தேவையற்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

எதிர்கட்சிகளின் பொறுப்பிலிருந்து அவர்கள் வேறு வேலைகளில் ஈடுபடுகின்றார்கள். காலத்தை அவர்கள் வீணடிக்காமல் நாட்டின் நன்மை கருதி அவர்கள் செயற்பட முன்வர வேண்டும் என நான் அவர்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுக்க விரும்புகின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X