2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

'ஐ.தே.க. மக்களின் தேவையை நிறைவேற்றும்'

Kogilavani   / 2015 ஜூன் 14 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி முழுமையான ஆட்சியை நிறுவி மக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுமென தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.

'அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்தம் மூலம் நிறுவப்படும் புதிய தேர்தல் முறையில் சிறுபான்மையினரும் சிறிய கட்சிகளும் பாதிக்கப்பட கூடாது' எனவும் அவர் வலியுறுத்தினார்.

கண்டி, பூஜாபிட்டி நகரில் அமைக்கப்படவுள்ள தபாலகத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(14) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு அண்;மையில் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தது. இத்திருத்தச் சட்ட மூலம் நாடாளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.

இத்திட்டம் மூலம் சிறுபான்மையினருக்கும் சிறிய கட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்பட கூடாது. அதற்காக தேவைப்படும் திருத்தங்களை செய்தே இது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டு;ம்.

புதிய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
ஆனாலும் நாங்கள் நல்லாட்சியின் மூலம் இயன்ற அளவு பொருத்தங்களை நிறைவேற்றி வருகின்றோம்.

சில வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த அரசு முழுமையாக ஐக்கிய தேசிய கட்;சியின் கையில் இல்லை.   ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிரிசேனவை எதிர்த்து பிராரம் செய்த, எதிர்த்து வாக்களித்தவர்கள் இன்று அமைச்சர்களாகவும் பிரதியமைச்சர்களாகவும் உள்ளனர்' என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X