2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ஹதபான் எல்ல காட்டுப்பகுதியில் உள்ள மரங்கள் வெட்டப்படுகின்றன

Sudharshini   / 2015 ஜூன் 17 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

உலகின் பிரசித்திபெற்ற சிங்கராஜ வனத்தின் ஒரு பகுதியான ஹதபான் எல்ல பிரதேசத்தில் பலவந்தமாக மரங்கள் வெட்டப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

சிங்கராஜ வனம் 11,187 ஹெக்டயார் நில பரப்பளவை கொண்டது. அதில் ஹதபான் எல்ல காட்டுப்பகுதி 3,200 ஹெக்டயார் நில பரப்பளவை கொண்டுள்ளது.

மேலும், இக்காட்டுப்பகுதி அழிக்கப்பட்டு விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

உலகின் பிரசித்திபெற்ற சிங்கராஜ வனத்தை பாதுகாப்பதற்கு உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X