2026 மே 14, வியாழக்கிழமை

dd

அரசாங்கத்திலிருந்து வெளியேறபோவதில்லை: திகா

Kogilavani   / 2015 ஜூன் 17 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ஆ.கோகிலவாணி

அரசாங்கத்திலிருந்து விலகபோவதாக வெளிவந்துள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் இன்று புதன்கிழமை  தெரிவித்தார்.

சிறுபான்மை கட்சிகளின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளத் தவறினால் அரசாங்கத்தை விட்டும் அமைச்சுப் பதவியை விட்டும் விலகத்தாயராக உள்ளதாக இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் இது தொடர்பில் தொடர்புகொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

'தற்போதைய அரசாங்கம் எனக்களித்துள்ள தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சை வைத்துகொண்டே பெருந்தோட்ட மக்களுக்காக பல்வேறு நலன்புரிசேவைகளில் ஈடுபட கூடியதாக உள்ளது. அரசாங்கத்தை விட்டு வெளியேறும் நோக்கிமில்லை' எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .