2025 ஜூன் 28, சனிக்கிழமை

98 இலட்சம் ரூபாய் செலவில் பாலம் திறப்பு

Kogilavani   / 2015 ஜூன் 26 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணிஸ்ரீ

சப்ரகமுவ மகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் 98 இலட்சம் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட அலபலாவள தன்தெனிய வீதியின் பாலம்  நேற்று வியாழக்கிழமை(25) சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்தினால் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

இப்பாலத்தின் மூலம்; எருகம, பாராபே, நில்வான, தம்செல்கொட, பொஸ்எல்ல, தந்தெனிய ஆகிய கிராம மற்றும் தோட்ட மக்கள் பயனடைந்துள்ளனர்.

மேற்படி பாலம் புனரமைக்கப்படுவதற்கு முன்னர் மூன்று அடி அகலமான மிக குறுகிய பாலததையே மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

மேற்படி நிகழ்வில் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத், மாகாண சபை உறுப்பினர் தாரக்க பாலசூரிய, மாகாண விவசாய அமைச்சின் இணைப்புச் செயலாளர் ராஜிகா விக்கிரமசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .